| சண்டிலியை ஆற்றுப் படுத்தல் | |
|
| நன்றுரை கேட்டு நயந்துளம் மகிழ்ந்தே | |
| `உன்மொழி யிசைஎனக் கோதுதி யோ?'என | 245 |
| `என்னால் இயம்புதல் இயல்வதொன் றன்று மின்னோர் இடையாய் மேம்படு செல்வர் தக்கார் அறவோர் தகுகலை யறிவின் மிக்கார் பலரும் தொக்குடன் வாழும் | |
| மணிநகர் என்னும் அணிநகர் உளது | 250 |
| பணிபுரி தொழிலே அணியெனப் பூண்டுள மலையுறை யடிகள் நிலைபெற நிறுவிய கலையகம் அந்நகர்க் கண்ணதுஅப் பள்ளியில் இசைக்கே இசைதரும் பெற்றியள் எமதுதென் | |
| திசைக்கே விளக்கந் திகழ்ந்திடத் திகழ்பவள் | 255 |
| இளங்கொடி பூங்கொடி எனுந்திரு வாட்டி உளங்கொள இசையை ஓதும் பணியினள் அவளுழைச் செல்கநின் ஆவல் நிறைவுறும்' என்றெனைப் பணிக்க ஈங்கிவண் வந்தேன்; | |
| | |
| சண்டிலியின் துணிந்துரை | |
| | |
| தணியா வேட்கை தணித்தனை! செல்விநின் | 260 |
| பணியால் தமிழிசை பாருல கெங்கும் இணையிதற் கிலையென ஏற்றமுற் றோங்கும் துணிவோ டிதனைச் சொல்லுதல் வல்லேன் சிறியவள் எனக்குச் செந்தமி ழிசைபால் | |
| முறுகிய ஆவலின் முழுதுணர்ந் தனனால்; | 265 |
| | |
| சண்டிலியின் அழைப்பு | |
| | |
| பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை | |
--------------------------------------------------------------- |
| தொக்கு - சேர்ந்து, வரூஉம் - வருவான். | |
| | |