பக்கம் எண் :

பெருநிலக்கிழார் வாழ்த்திய காதைபக்கம் : 155

 
  விலைபெறு பட்டும் விரிமலர் இதழும்
குலவிட அதன்மிசைக் கொற்றவன் என்ன
எழில்பெற இருக்கும் பெருநிலக் கிழார்முன்
தொழுதவண் வந்தோர் சொற்றனர் சிலசொல்;
 
     
 

வந்தவர் செய்தி கூறல்

 
     
  `இசையும் கூத்தும் நசையுடன் பேணும் 135
  வசையிலாப் பெரும, வாழ்கநின் உள்ளம்!
தமிழகச் செல்வி, தண்டமிழ்ப் புலத்தி
அமிழ்தெனும் இசையில் அளப்பருந் திறத்தி,
தொண்டுளம் பூண்டவள், தோகை அவள்முகம்
 
  கண்டவர் தொழுதிடும் கருணை நிறைந்தவள், 140
  புண்ணியத் திருவினள், பூங்கொடிப் பெயரினள்,
நண்ணிஇத் திருநகர் நயந்திடும் வகையால்
பண்ணிசை பரப்பும் பணியினள் உரவோய்!
ஈங்கவட் கூஉய் இன்னிசை கேட்டுப்
 
  பாங்கறிந் தவட்குப் பரிசிலும் நல்கிச் 145
  சீரும் சிறப்பும் செய்வன செய்து
போற்றுதல் நும்போல் பொருளுணர் மாந்தர்
ஆற்றிடுங் கடன்'என ஆர்வலர் இசைத்திடப்
 
     
 

பெருநிலக்கிழார் அழைப்பு

 
     
  பெருநிலக் கிழவரும் பெரிதுளம் மகிழ்ந்தே  
  `அருளுளங் கொண்டவள் ஆற்றுநற் பணியைப் 150
  பிறரும் வியந்து பேசிடக் கேட்டுளேன்,
நெருநல் மாலை நேரிழை அவளைக்
கண்டுரை யாடக் கருதினேன், ஆயினும்
தொண்டுளம் பூண்டஅத் தோகையைக் காண்கிலேன்;
 
  ஒல்லையிற் காண்குவென், உயரிசை கேட்குவென் 155
  ஒல்லும் வகையான் உறுதுணை புரிகுவென்'
என்றுளங் கனிய இசைத்தவர் ஒருநாள்
 

---------------------------------------------------------------

  புலத்தி - புலமைமிக்கவள், ஆர்வலர் - அன்பர், நெருநல் - நேற்று.