பக்கம் எண் :

பெருநிலக்கிழார் வாழ்த்திய காதைபக்கம் : 157

 
     
 

கிழார்முன் பூங்கொடி

 
     
  அகத்தும் முகத்தும் ஆர்தரும் உவகை 185
  மிகுத்தன ளாகி மேலுயர் பொழிலின்
நாப்பண் நிறுவிய நலம்பல பழுநிய
காப்பமை மாளிகை கண்டனள் புக்குக்
கூப்பிய கையினள் வாழ்த்திய வாயினள்
 
  மூப்பினை அறிய முடியா முகத்தின் 190
  பெருநிலக் கிழவர் முன்னர்க் குறுகினள்;  
     
 

பெருநிலக்கிழார் வேண்டல்

 
     
  பெறலரும் பொருளைப் பெற்றால் என்னப்
பெருமகிழ் வெய்திப் பெரியவர் வாழ்த்திப்
`பெண்மையின் உருவே! கண்ணின் மணியே!
 
  புண்ணிய மகளே! பூங்கொடி அன்னாய்! 195
  பண்ணிசை நுகரும் பரிவுடன் அழைத்தனென்,
என்செவி குளிர என்னகம் மகிழ
நின்னிசை வார்க்க நேரிழை ஒல்லுமோ?
புதுமைச் சுவடியிற் பொதிந்துள உண்மைகள்
 
  முதுமை யுற்றேற்கு மொழிகதில் லம்ம!' 200
  எனவாங்கு
இரப்பார் போல இயம்பினராக,
 
     
 

பூங்கொடி பாடுதல்

 
     
  `பரப்புதல் இசையைப் பணியெனக் கொண்டுளேன்,
புரப்பது கடனெனப் பூண்டுளீர் நீவிர்,
 
  தனியள் எனக்குத் தந்தநும் ஆணை 205
  இனிதெனக் கொள்வேன், இயலும் வகையான்
தெரிந்தென கூறிச் செல்லுதல் என்கடன்,
பெருந்தனம் உடையீர் பிழைபொறுத் தருள்க'
என்றவள் பணிந்துரை இயம்பி மீனவன்
 

---------------------------------------------------------------

  ஆர்தரும் - நிறையும், நாப்பண் - நடுவில், பழுநிய - முதிர்ந்த, புரப்பது - காப்பது.