பக்கம் எண் :

பக்கம் :170பூங்கொடி

 
  பொங்கிய வெள்ளம் புகாவழிப் புகுந்தது;
`தங்கிடன் புகுவேன் தையலை நகுவேன்
எங்கவள் தப்புவள்? என்மனம் ஒப்புவள்
 
  ஆசை பகர்வேன் அவள்நலம் நுகர்வேன் 130
  ஏசிய அவளினி என்கை தவறாள்'
எனமனத் தெண்ணி எழுந்து நடந்தனன்;
 
     
 

நள்ளிரவில் கோமகன்

 
     
  நள்ளிராப் பொழுதிற் கள்ளனை நிகர்ப்போன்;
மெல்லென நடந்து நல்லவள் வதியிடன்
 
  மனத்துணி வுடனே மயங்கினன் செல்வோன் 135
  தனைத்தெரி யாவகை தயங்கித் தயங்கிப்
புறமும் அகமும் புழுங்கி வியர்க்க
உடலும் உளமும் ஒருங்குடன் நடுங்க
நெஞ்சினில் துடிப்பும் நெட்டுயிர்ப் பொலியும்
 
  விஞ்சும் முறையில் வெடவெடத் தேகினன்; 140
     
 

துருவன் தொடர்தல்

 
     
  ஒதுங்கியும் பதுங்கியுஞ் செல்லுமோ ருருவம்
அரவப் படாஅவகை அடியெடுத் தேகினும்
துருவப் பெயரோன் துயிலா விழியில்
தெள்ளிதிற் றெரிதரத் துள்ளி எழுந்தவன்
 
  கள்ளச் செயலோன் கட்படா வகையில் 145
  மெல்லத் தொடர்ந்தனன் மேவிய இருளில்;  
     
 

கோமகன் ஓர் அறையுட் புகுதல்

 
     
  பழிசெய அஞ்சாக் கழிமிகு காம
வழியினிற் செல்வோன், வருவதும் ஓரான்
ஆண்டோர் அறையின் அடைகத வொன்றைத்
 
  தீண்டினன் கதவம் திறந்தது கண்டோன் 150
  `என்வர வறிந்தே இடுதாழ் இட்டிலள்,  

---------------------------------------------------------------

  அரவம் - ஓசை, படாஅவகை - படாமல்.