|
| இருளிடை வான மறுகினில் நின்று | |
| காதலற் காணுங் கழிபே ரவாவொடு | 100 |
| பேதலித் தாங்கண் பெருமூச் செறியக் காற்றெனுங் காதலன் கள்வழி மலர்மணம் போற்றித் தன்னுடற் பூசி வந்தனன்; கொழுநற் காணலுங் கூசி அன்னவள் | |
| எழிலி எனுந்துகி லெடுத்துப் போர்த்துத் | 105 |
| தன்முகம் மறைத்துத் தயங்கி நின்றனள்; வீசுகை கொண்டதை விலக்கின னாகப் பேசுகை யின்றிப் பெண்மையின் நகர்ந்தனள்; தூசு பற்றினன் தொடர்ந்திடுங் காதலன் | |
| மாசறு மேகலைக் காசுடன் முத்தும் | 110 |
| வீசிச் சிதறி வீழ்ந்தன வானில் வீழும் அவையே மின்னும் உடுவெனச் சூழும் அவ்விடைச் சுடர்விட் டெரிந்தன; எனவாங்கு | |
| கற்பனை வடித்துக் கவிதையும் முடித்து | 115 |
| நிற்பவன் நெஞ்சில் நேரிழை உருவம் பொற்புட னாடல் புரிவது கண்டனன்; | |
| | |
| கோமகன் காம எழுச்சி | |
| | |
| இரவுங் குளிரும் எரிதழல் மூட்ட வருமந் நிலவுவாரிநெய் யூற்ற | |
| வாடையுந் தென்றலும் மாறி மாறி | 120 |
| நீடவை வீசலால் நெஞ்சினிற் கனன்று சுடர்விட் டெரிந்தது சொலற்கருங் காமம்; கோமகன் அடங்காக் காமுகன் ஆயினன்; நிறையும் பண்பும் இருகரை யாகச் | |
| செறிபுனல் நிகர்க்கும் நெறிபடு காமம் | 125 |
| உறுகரை கடந்தது முறைமையும் இகந்தது; | |
--------------------------------------------------------------- |
| தூசு - ஆடை. | |
| | |