பக்கம் எண் :

பக்கம் :168பூங்கொடி

 
  விண்ணகத் திருப்பினும் மண்ணகத் திருப்பினும்  
  கண்ணிய காமங் கதுவப் பட்டார் 75
  கண்ணுறக் கொழிந்து கண்ணீர் பொழிந்து
புண்ணுறல் யாண்டும் புதுவதன்று போலும்!
என்னிற் பெரிதே இடர்ப்பா டுற்றனை!
நின்னிற் பிரிந்தோன் நிகழ்த்திய துயரால்
 
  எண்ணிப் பொழிந்த கண்ணீர்த் துளிதாம் 80
  விண்ணிற் சிதறும் வெண்மீன் கொல்லோ?
நின்னை இகழ்ந்தனன் நீவிழை யொருவன்,
என்னை இகழ்ந்தனள் யான்விழை யொருத்தி,
விழைந்தவர் தம்மை வேட்டுளங் கொளாஅது
 
  குழைந்து தளர்ந்திடக் கொடுந்துயர் படுத்துதல் 85
  இழிந்தவர் செயலாம்' எனப்பல புலம்பித்  
     
 

திங்களிற் பூங்கொடி

 
     
  திங்களை நோக்கினன் நோக்கிய திங்களில்
செங்கயல் மீன்விழி பொங்கெழிற் பூங்கொடி
வஞ்சியின் முகமலர் வடிவினைக் கண்டனன்;
 
  நெஞ்சினில் விஞ்சிய நீள்படர் காமம் 90
  பஞ்சினில் தீயெனப் பற்றிப் படர்ந்தது;
உடுத்திரள் சூழ்தர உயர்பெரும் வானில்
நடுப்பட நின்றொளி நல்கிடும் அம்புலி,
படிப்பவர் சூழ்தரப் பண்ணிசை யரங்கிற்
 
  படைத்திடும் பூங்கொடி பான்மையிற் றெரிதரக் 95
  கற்பனைப் பெருக்கில் மூழ்கிக் களித்தனன்;
முற்படு காதல் நினைவே முகிழ்த்தது;
 
     
 

கோமகன் கற்பனை

 
     
  கருமுகில் உடீஇய நிலவெனுங் காதலி  

---------------------------------------------------------------

  கண்ணிய - கருதிய, உறக்கு - உறக்கம், உடீஇய - உடுத்த.