|
| இருட்பகை ஓட்டும் எண்ணரும் விண்மீன் செருப்புலம் நோக்கிப் புறப்படும் மறவர் | |
| திறப்பட அணியணி வகுத்திடல் மான | 50 |
| முறைப்படுத் தியக்கும் முதல்வன் போலவும் ஒளியும் அளியும் உருவும் நிறைமதி வெளிபடர் விண்ணக மறுகினில் போந்தது; | |
| | |
| நிலவின் செயல் | |
| | |
| பாரி லின்பம் பயந்தவோர் பொருளே | |
| மாறித் துன்பம் வழங்கலுங் கூடும் | 55 |
| பரிசினை விளக்கும் பான்மைய தாகித் திரியும் மதியம், விரிமலர்ப் பாயற் கவவுக் கையர் காதலர் தமக்குத் திவவுக் கோல்யாழ் தெளிநரம் பிசைபோல் | |
| தவமகிழ் வூட்டத் தண்ணொளி வீசிப் | 60 |
| பிரிந்தவர் தம்மைப் பெருந்துயர்க் கடலுள் வருந்திடச் செய்து வாயுலைக் குருகின் வெய்துயிர்ப் பெறிய வெந்தழல் சிந்திக் கைவிரித் தெங்குங் கலையெழில் வழங்கி | |
| மண்ணகம் நோக்கும் வளர்முகங் காட்டி | 65 |
| விண்ணகப் பரப்பில் மெல்லென நகர்ந்தது; | |
| | |
| கோமகன் புலம்பல் | |
| | |
| பாயலில் நெளியும் படுதுயர்க் கோமகன் காயும் நிலவைக் கண்ணிமைப் பிலனாய் நோக்குழி நோக்குழி நெட்டுயிர்த் ததனை | |
| வீக்கிய துயரோன் விளித்து `வானச் | 70 |
| சேக்கையில் என்போற் சிந்தை குலைந்து நீக்கிய துயிலொடு நிலைதடு மாறிப் போக்கொழிந் தனைகொல்? புகலுதி திருமதி! | |
--------------------------------------------------------------- |
| செருப்புலம் - போர்க்களம், அளி - கருணை, கவவு - தழுவிய, திவவு - நரம்புக்கட்டு, காயும் - கோபிக்கின்ற, ஒளிவிடுகின்ற. | |
| | |