பக்கம் எண் :

பக்கம் :166பூங்கொடி

 
  எஞ்சா துரைத்தனள்; இசைத்தவை கேட்டோன்  
  நெஞ்சால் மகிழ்ந்து நேரிசைச் செல்வியைக் 25
     
 

துருவன் பூங்கொடியைக் காண விழைதல்

 
     
  காண்டல் விருப்பொடு காரிகை நோக்கி
`யாண்டுளாள் அம்மகள்? யானவள் பணிக்கு
நன்றியும் வணக்கமும் நவிலுதல் வேண்டும்'
என்றவற் கம்மகள் இயம்புவோள் `அன்ப!
 
     
 

சண்டிலி மறுமொழி

 
     
  பழுதறு கலைக்கே பொழுதெலாம் ஆக்கிக் 30
  கழிபே ருவகை காணும் பெரியர்
இருநிதிக் கிழவர் பெருநிலக் கிழார்பால்
சுரிகுழற் பூங்கொடி சொல்லுரை யாட
ஏகியோள் இன்னும் ஏனோ மீண்டிலள்!
 
  பாயிருள் நீங்கப் பகலவன் தோன்றிக் 35
  காய்கதிர் வீசுங் கலைப் பொழுதத்துக்
காண்குதும் இனிநீ கண்படை கொள்கெனச்
சேண்படு நகர்வரூஉம் செழுநிதித் துருவன்
பாங்க ரமைந்தவோர் பாயல் விரித்த
 
  ஓங்குபே ரறையகத் தொருபா லணைந்தனன்; 40
     
 

நிலவின் தோற்றம்

 
     
  வானகப் பள்ளியில் மாணவக் குழுவென
மீனினம் ஆங்காங்கு மிடைந்து விளங்கிடப்
பொருட்டிறந் தெருட்டும் ஆசான் போலவும்
அருட்டிறம் வேண்டி அவரவர் குறையை
 
  விரித்துரை செய்வான் வியனகர் வாயிலில் 45
  குழுமுங் குடியென உடுவினம் அணிசெயத்
தொழுதகும் அரசன் தோற்றம் போலவும்
 

---------------------------------------------------------------

  பாயிருள் - பரவிய இருள், பொருட்டிறம் - பொருள்திறம், அருட்டிறம் - அருள்திறம்.