பக்கம் எண் :

பக்கம் : 165

22. கோமகன் கொலையுறு காதை

 
 

சண்டிலியின் கணவன் வருகை

 
     
  மழைவளர் சாரல் மாமலைப் பொதியில்
குழலின் இனிய குரலிசை கேட்டுத்
தன்வய மிழந்து தமிழிசை வேட்டுப்
பயிலும் ஆர்வம் மீக்கூர் பாவை

 
  அயில்வேல் விழியள் மயிலியள் சண்டிலி 5
  பிரிவினைப் பொறாஅன் பேதையின் கணவன்
துருவன் என்பான் தோகையைக் காணும்
ஆர்வல னாகி அணிதிகழ் மாடஞ்
சேர்தரு மறுகுகள் செறிந்தெழில் விளங்கும்
 
  வேங்கை நகரெனும் வியனகர் புகுந்தோன், 10
  ஆங்கண் ஓங்கிய அகல்வாய் மாளிகை
வதியிடன் குறுகிஅம் மங்கையைக் கூடிப்
புதுமகிழ் வெய்திப் பூரிப் புற்றனன்;
 
     
 

சண்டிலி நிகழ்ந்தன கூறல்

 
     
  ஓதும் பொருட்டாற் காதலற் பிரிந்த  
  மாதும் கொழுநன் வரவால் தழைத்த 15
  நெஞ்சினள் அவற்கு நிகழ்ந்தன கூறுவோள்
பஞ்சியின் மெல்லடிப் பாவை பூங்கொடி
வஞ்சியின் அருளால் வளர்தமி ழிசையில்
விஞ்சிய புலமை விளங்கிடப் பெற்றதூஉம்,
 
  பயிற்றிய பூங்கொடி பழகிய முறையதூஉம், 20
  செயற்றிறம் பழுநியோள் செம்மனத் தொண்டும்
பண்பும் அன்பும் பண்ணிசைத் திறனும்
மன்பதை உரைபுகழ் மாண்பும் பிறவும்
 

---------------------------------------------------------------

  மீக்கூர் - மேம்பட்ட, பொறா அன் - பொறுக்கமாட்டாதவன். பழுநியோள் - முதிர்ந்தவள், மன்பதை - மக்கள்.