|
| நூலகத்திற்கு மாளிகை தர வேண்டுதல் | |
| | |
| ஈங்குநின் னுரியன எண்ணில மாளிகை ஆங்கவை தம்முள் ஓங்கிய நூலகம் ஆக்கிட ஒன்றனை அளித்திடல் நின்கடன் | |
| தேக்கிய நிதியும் செறிந்துள தறிவேன்; | 125 |
| ஈதற் பண்பும் இயல்பான் அமைந்தனை, ஆதலின் நூலகத் தரும்பெரும் பணிக்குப் பொறுப்புடன் அருளும் பொருளும் அளித்து விருப்புடன் காக்க வேண்டுவல் யானே, | |
| இஃதென் விழைவாம்' என்றனள் பூங்கொடி; | 130 |
| | |
| கிழார் உறுதியளித்தல் | |
| | |
| `அஃதுன் விழைவெனின் ஆகுக அவ்வணம் நன்று நினைப்பின் அன்றுசெயல் வேண்டும்; இன்றே முடிப்பேன், இரவென நின்றேன், காலை புலர்ந்ததும் கடிதினில் முடித்து | |
| நாளை நூலகம் நடுவூர் ஆங்கண் | 135 |
| மிளிரக் காண்குவை; மேம்படும் நின்மனம் குளிரக் காண்பதென் குறிக்கோள் ஆகும்' எனுமொழி இயம்ப இளங்கொடி மகிழ்ந்து | |
| நனிமிகு நன்றி நவின்றே கினளே. | 139 |
| | |
--------------------------------------------------------------- |
| துருவி - ஆராய்ந்து, தரூஉம் - தரும். | |
| | |