|
| மரமென மண்ணென மதித்தனை கொல்லோ? அரிவை யிகழ்ந்தனை! அறிவை யிகழ்ந்தனை! | |
| தெரிவை விரைவினில் தெரிவை திறமெலாம் | 180 |
| இன்னே ஏகுதி இவ்வுழை யகன்றே கொன்னே வளர்ந்தனை கொடியோய்' என்று மின்னேர் இடையாள் வெகுண்டுரை கூறக் | |
| | |
| கோமகன் காமவுரை | |
| | |
| `கண்டன மொழியாய்! காயும் விழியாய்! | |
| சண்டிலி நின்பாற் சாற்றுவ துடையேன் | 185 |
| கொண்டுள காதல் விண்டுளேன் அறிவாய், ஒண்டொடி மறுப்பின் உயிர்பெரி தன்றே! நொடிநொடி யாக மடிவது தாளேன், விடியுமுன் காதல் விருந்துண் டமைவேன், | |
| எத்துணைத் தடுப்பினும் இனிப்பொறேன் நெஞ்சில் | 190 |
| அத்துணை உணர்ச்சி அழலாய் எரித்ததே; உறுபசி கொண்டோன் உண்டியின் ஒப்புதல் பெறுவதும் உண்டோ? பெரும்பசி கொண்டேன்; உண்டியும் அருகி லுறுவது கண்டேன் | |
| உண்பது தடுப்பார் ஒருவரும் ஈங்கிலை' | 195 |
| என்றுரை கோமகன் இழிமொழி கேட்டுத் | |
| | |
| துருவன் கோமகனைத் தாக்குதல் | |
| | |
| தன்றுணை யாகிய சண்டிலி கற்பினைச் சென்றுண முனைந்தனன் என்றுளம் அயிர்த்துக் கன்றிய நெஞ்சினன் கனல்படு கண்ணினன் | |
| துன்றி எழுந்தனன் துருவன், புலியெனப் | 200 |
| பாய்ந்தனன் அவன்மேற் சாய்ந்தனன் கோமகன்; காய்ந்திரு கைகொடு காமுகன் முகத்தில் முழுவலி யாலவன் மோதினன் தாக்கினன்; | |
--------------------------------------------------------------- |
| தெரிவை - தெரிவாய், தெரிவை - பெண், கண்டன - கண்டிக்கும், கற்கண்டு போலும், காயும் - கோபிக்கின்ற, ஒளிவிடும். | |
| | |