|
| விழுமவன் தானும் வேங்கையிற் சீறி | |
| எழுதரக் கனன்றுடன் இருவரும் பொருதனர்; | 205 |
| அழிவது யாரென அறியா வகையிற் புழுதியிற் புரண்டனர் புழுங்கினர் அழுங்கினர்; | |
| | |
| துருவன் கொலை செய்யச் சண்டிலி கதறல் | |
| | |
| கழிமிகு காமங் கனன்றெழு மார்பிற் குழிபட ஓச்சிக் கொடுவாள் செலுத்திப் | |
| பறித்தனன் துருவன்; பறித்தஅவ் வாள்நுனி | 210 |
| கண்ணீர்த் துளியெனச் செந்நீர்த் துளிகளை மண்ணிற் கிடந்தோன் மார்பினிற் சிந்த, விரிபடு மார்பில் வேட்கைப் பெருக்கெனக் குருதிப் பெரும்புனல் கொப்பளித் ததுவே; | |
| அந்நிலை காண அஞ்சிய மெல்லியல் | 215 |
| நன்மலர்க் கையால் தன்முகம் புதைத்துக் கூஉய் அழுதனள், கொடுமை என்றனள், ஆஅய்புலம் இன்றி அடாஅது செய்தனை! எனப்பல கூறி இரைந்தனள் இரங்கினள்; | |
| மனத்திகில் கொண்ட மணாளன் மலைத்தனன்; | 220 |
| | |
| கோமகன் முடிவும் - துருவன் ஓடிமறைதலும் | |
| | |
| செந்நீர்க் காட்டிற் சீரழிந்து கிடப்போன் புண்ணீர் வடிந்து பொங்கிய வாயிதழ் பூஉங்ங் கொடிஎனப் பூஉங்ங் கொடியெனக் கூஉம்பி யசைந்தன, குளிர்ந்ததவ் வுடலம்; | |
| தேஎம்பி யழுதன திங்களும் வானமும்; | 225 |
| ஐயமுஞ் சீற்றமும் ஆட்கொண் டமையால் வெய்யவ னாகி வீண்கொலை புரிந்து செய்வதொன் றறியாது திகைத்திடுந் துருவன் பெய்வளை யாளொடும் உய்வகை கருதிக் | |
| காணா தேகிக் கரந்தனன் விரைந்தே. | 230 |
--------------------------------------------------------------- |
| ஆஅய்புலம் - ஆராயும் அறிவு, அடாஅது - தகாதது, பூஉங்ங் கொடி - பூங்கொடி, கூஉம்பி - குவித்து, தேஎம்பி - தேம்பி. | |
| | |