பக்கம் எண் :

பக்கம் :174

23. சிறைப்படு காதை

 
 

பூங்கொடி வருதல்

 
     
  பெருநிலக் கிழவர் பெட்புடன் மகிழ்ந்தே
அருளிய வாழ்த்தும் அவ்வூர் நாப்பண்
ஞாலங் காணாக் கோலங் கொண்ட
நூலகம் அமைக்க நுவல்மொழி உறுதியும்

 
  பெற்றநற் பூங்கொடி குற்றமில் மனத்துள் 5
  உள்றெழு மகிழ்வால் சொற்றமிழ் இசைதரு
மாட மாளிகை மன்றினும் புகுதரக்
கூட வாயிலில் குருதி கண்டனள்;
 
     
 

பூங்கொடி மயக்கம்

 
     
  கண்டவள் நடுங்கிக் கால்தடு மாறிச்  
  `சண்டிலி சண்டிலி' என்றுரை சாற்றியும் 10
  கண்டிலள் அவளைக் கடும்பே ரமைதி
கொண்டு திகழ்ந்தது கோவுயர் மாளிகை;
அஞ்சிய ஒண்டொடி ஆங்காங் கோடித்
துஞ்சுவள் அவளெனத் துருவினள் யாண்டும்
 
  காண்கில ளாகிக் கலங்கிய அம்மகள் 15
  தூண்களி னிடையே துணுக்குற நோக்கினள்;
மணமக னாகும் மனத்தொடு வந்தோன்
பிணமக னாகிப் பிறிதுறக் கிடந்த
கொடுமை காணலுங் கோவெனக் கதறிச்
 
  சுடுதழல் மிதித்தெனத் துவண்டு சுருண்டு 20
  மயங்கி விழுந்தனள் மண்மிசை யாங்கே;  
     
 

மயக்கந் தெளிந்து புலம்பல்

 
     
  மயங்கிருள் தெளிய வைகறை வந்துற
வயங்கிணர்க் கொடிநிகர் மயங்கிய பூங்கொடி
சற்றே தெளிவுறச் சட்டென எழுந்து