பக்கம் எண் :

கோமகன் மீண்டும் தோன்றிய காதைபக்கம் : 149

 
  ஒருதலைக் காமம் உடையவர் தாமே 295
  வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம்
மற்றவர் மனத்தை மதியா ராகிச்
சுற்றுதல் இழிதகைத் தொழிலே அன்றோ?
 
     
 

காதற் கொடுமைகள்

 
     
  காதல் என்றுல கோதும் பெயர்தான்  
  `ஏது வாக இயற்றும் கொடுமைகள் 300
  எத்துணை எத்துணை! கானல்நீர் இதனை
நத்தின ராகி நலிவது பேதமை;
பெண்மை பெண்மைஎனப் பேசி மகளிரைக்
கண்ணை மறைத்துக் கருவியென் றடிமையென்
 
  றெண்ணுங் கொடுமை ஏகுவ தெந்நாள்? 305
  காமங் கடந்த காரிகையர் தம்மைத்
தீமனம் கொண்டோர் பழிமொழி செப்பிக்
காப்பிலாப் பொருளெனக் கருதிக் கவர்ந்திட
மோப்பம் பிடிக்க முயலும் கள்வர்
 
  பல்கினர்; இளையோய்! பண்பிலா இம்மொழி 310
  சொல்லுதல் இனிமேல் தொலைகநீ பெரும!
எண்ணித் துணிந்ததே இப்பணி' எனச்சொலக்
 
     
 

கோமகன் ஏக்கம்

 
     
  கண்ணும் முகமும் கருத்துத் தலைகவிழ்த்
துள்ளம் கலங்கி உறுநடை தளர்ந்து
 
  பிறிதொரு பாங்கர்க் குறுகின னாக, 315
  முறுகிய காமம் குறைந்திலன் இவன்எனக்
கருதிய பூங்கொடி கலங்கிய மனத்தள்
ஆடவர் மனநிலை அறிகுநர் யாரெனத்
தோடலர் மாலை சூடிய சண்டிலி
 
  துணியிற் பிரியா திருந்தனள் அவளே. 320

---------------------------------------------------------------

  காப்பிலா - காவலில்லாத, தோடலர் - இதழ்விரிந்த.