பக்கம் எண் :

பக்கம் :150

20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை

 
 

கோமகன் வஞ்சினம்

 
     
  கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன்
இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி
சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக்
கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப்

 
  பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி 5
  மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள்
எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்;
தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி
வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக்
 
  கொள்ளா தொழியேன் என்றுளங் கொளீஇச் 10
  செல்லா நின்றனன்; சென்றவன் ஒருநாள்  
     
 

சண்டிலியை வேண்டல்

 
     
  சண்டிலி தன்பாற் சார்ந்தனன் குறுகிக்
கண்டினை நிகரிசை கைவல பூங்கொடி
விண்டுரை யாடிய வெந்துயர்க் கொடுமொழி
 
  தண்டா துரைத்துத் `தையாஅல் அவள்மணங் 15
  கொண்டா லன்றிக் கொண்டுயிர் வாழேன்;
சிறுமகள் அவளுழைச் செலீஇய என்னுளம்
பெறுவழி யறியாது பேதுறு வேனைக்
காத்தல் நின்கடன், கடிமணங் கொள்ளப்
 
  பூத்தநல் லிளங்கொடி புந்தியை மாற்றி 20
  என்பாற் படுத்'தென இரந்துரை கூறினன்;  
     
 

சண்டிலி இடித்துரை

 
     
  `பெண்பாற் குழலும் பெரியோய்! திருமணம்  

---------------------------------------------------------------

  பொறாஅ - பொறுக்காத, மறாஅ - மறுக்காத, எனாஅ - என்று, கொளீஇ - கொண்டு, தையாஅல் - சண்டிலியே, செலீஇய - சென்ற.