20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை | |
|
| கோமகன் வஞ்சினம் | |
| | |
| கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக் கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப் | |
| பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி | 5 |
| மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்; தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக் | |
| கொள்ளா தொழியேன் என்றுளங் கொளீஇச் | 10 |
| செல்லா நின்றனன்; சென்றவன் ஒருநாள் | |
| | |
| சண்டிலியை வேண்டல் | |
| | |
| சண்டிலி தன்பாற் சார்ந்தனன் குறுகிக் கண்டினை நிகரிசை கைவல பூங்கொடி விண்டுரை யாடிய வெந்துயர்க் கொடுமொழி | |
| தண்டா துரைத்துத் `தையாஅல் அவள்மணங் | 15 |
| கொண்டா லன்றிக் கொண்டுயிர் வாழேன்; சிறுமகள் அவளுழைச் செலீஇய என்னுளம் பெறுவழி யறியாது பேதுறு வேனைக் காத்தல் நின்கடன், கடிமணங் கொள்ளப் | |
| பூத்தநல் லிளங்கொடி புந்தியை மாற்றி | 20 |
| என்பாற் படுத்'தென இரந்துரை கூறினன்; | |
| | |
| சண்டிலி இடித்துரை | |
| | |
| `பெண்பாற் குழலும் பெரியோய்! திருமணம் | |
--------------------------------------------------------------- |
| பொறாஅ - பொறுக்காத, மறாஅ - மறுக்காத, எனாஅ - என்று, கொளீஇ - கொண்டு, தையாஅல் - சண்டிலியே, செலீஇய - சென்ற. | |
| | |