|
| வன்பாற் பெறுதல் வரன்முறை யன்றே! ஆசை யரும்பா அரிவையின் நெஞ்சில் | |
| பேசிய காதற் பெருங்கனி பறிக்கக் | 25 |
| கூசினை யல்லை, கொடுமதி விடுமதி; பாலுணர் வகற்றிய பாவையின் நல்லுளம் காலள வேனும் கருத்திற் கொண்டிலை, விழையா ஒருத்தியை விழையா நின்றனை, | |
| பிழையாம் அதனைப் பேணி அகன்றிலை, | 30 |
| கிட்டா தாயின் வெட்டென மறத்தலைக் கற்றா யலைநீ, காளைப் பருவம் பெற்றாய் அதன்மனம் பெற்றாய் கொல்லோ? பாலையில் தண்புனல் பருகிட முனைந்தனை, | |
| காலையை இரவெனக் கருதி அலைந்தனை, | 35 |
| கொல்லும் காமத்துக் கோட்படா தொழிமதி, அல்லும் பகலும் அரும்பெரும் பணியில் செல்லும் மகளின் செந்நெறிப் புகுந்து செல்லல் விளைத்திடல் தீதினும் தீது'என | |
| நல்லறி வுறுத்தினள் நங்கைஅச் சண்டிலி; | 40 |
| | |
| கோமகன் வியப்பு | |
| | |
| கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட் டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக் கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன், `காவயிம் வல்லான் கற்பனை தூண்டும் | |
| ஓவியம் என்ன உருவம் உடையள், | 45 |
| பாலும் பழமும் பஞ்சணை மலரும் நாலும் விழையும் நல்லிளம் பருவம், வேலும் வாளும் மானும் விழியள், காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள் | |
| வாமக் காளையர் வழிபடு தெய்வம், | 50 |
--------------------------------------------------------------- |
| செல்லல் - துன்பம், வாமம் - இளமை. | |
| | |