|
| இதற்கு நலத்தள் எழில்வளர் பூங்கொடி எட்டுணை யேனும் எண்ணிலள் காமம், பெட்டவர் பலராய்ப் பெருகினும், இவளோ விட்டனள் காமம், இவள்செயல் வியப்பே! | |
| பலரொடு கலந்தும் பொதுநலம் புரிந்தும் | 55 |
| அலையும் இம்மகள் ஆசை துறந்தனள், நிலையும் திறம்பிலள், நினைப்பரும் வியப்பே!' என்றுளம் வியந்தனன் ஏகுவோன் மனத்துச் | |
| | |
| கோமகன் கொதிப்பு | |
| | |
| சுடுநெருப் பாகிச் சுடர்விடு காமம் | |
| படர்ந்து விரிந்த பான்மை போலச் | 60 |
| செக்கர் படர்ந்து சிறந்தது வானில்; வெட்கி மூளும் விடலையின் விரிமுகம் செக்கச் சிவந்து தெளிவிழந் ததுபோல் மேலைத் திசையில் மெல்லெனச் செல்லும் | |
| மாலைக் கதிரவன் மறைமுகங் காட்டினன்; | 65 |
| மாமலர்ப் பூங்கொடி மையலைப் பெறாஅக் காம வேகங் கடுகித் தாக்குறத் துடிதுடித் தாடும் நெஞ்சகம் போலக் கடிதடித் தேகும் கடுங்கால் மோதலின் | |
| படபடத் தாடின பைந்தளிர்ப் பரப்பு; | 70 |
| கூந்தலைப் பல்வகைக் கோலஞ் செய்தும், மாந்தளிர் மேனியில் மணியணி பூண்டும், கண்ணும் புருவமும் கருமை தீட்டியும், வண்ண ஆடைகள் வகைவகை உடுத்தும், | |
| ஒப்பனை முடித்த ஒண்டொடி மகளிர் | 75 |
| கப்பிய காதற் கணவரொடு கூடி மலர்வனம் புகூஉம் மனங்கவர் காட்சி | |
--------------------------------------------------------------- |
| எட்டுணை - எவ்வளவு, திறம்பிலள் - மாறுபட்டிலள், செக்கர் - சிவப்பு, பெறாஅ - பெறாத, கப்பிய - நிறைந்த. | |
| | |