பக்கம் எண் :

பெருநிலக்கிழார் வாழ்த்திய காதைபக்கம் : 153

 
  அலைவுறும் அவன்மனத்து அணலாய்க் கனற்ற
ஊதுலைக் குருகின் வெய்துயிர்த் தேகினன்;
 
     
 

மாளிகையில் இசை முழக்கம்

 
     
  பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும், 80
  தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும்,
தெரிதரு யாழில் விரிதரும் இசையும்,
முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும்,
காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும்,
 
  ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும், 85
  கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து
பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம்
மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது;
ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர்
 
  செவியகம் பாய்ந்து சிந்தை நிறைந்தது; 90
  புவியகம் யாங்கணும் புகழ்மணம் மலர்ந்தது;  
     
 

மாந்தர் வியந்துரை

 
     
  சுரிகுழற் பூங்கொடி சொற்றமிழ் இசையை
மறுகிடைக் கேட்குநர் வழங்குதல் தவிர்த்துச்
செயல்மறந் தாங்கண் சிந்தையும் உருகிக்
 
  கயல்விழி இசையின் கற்பனைத் திறனும் 95
  பயில்வார்க் கோதும் பாங்கின் திறனும்
நல்லிளம் பருவத்துப் பல்வகை இசையில்
வல்லவ ளாகிய வகையும் கண்டு
வியந்துரை கூறி வியநகர் மாந்தர்
 
  நயந்தன ராகி நல்கினர் வாழ்த்தொலி; 100
  வாய்விட் டுரைத்து வாழ்த்திய மாந்தருள்
தோய்மகிழ் மனத்துத் தூயோர் ஒருசிலர்
கலைப்பணி ஒன்றே தலைப்பணி என்று
 

---------------------------------------------------------------

  ஊதுலைக்குருகு - துருத்தி, தண்ணுமை - மத்தளம், மறுகிடை - தெருக்களில்.