|
| அலைவுறும் அவன்மனத்து அணலாய்க் கனற்ற ஊதுலைக் குருகின் வெய்துயிர்த் தேகினன்; | |
| | |
| மாளிகையில் இசை முழக்கம் | |
| | |
| பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும், | 80 |
| தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும், தெரிதரு யாழில் விரிதரும் இசையும், முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும், காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும், | |
| ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும், | 85 |
| கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம் மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது; ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர் | |
| செவியகம் பாய்ந்து சிந்தை நிறைந்தது; | 90 |
| புவியகம் யாங்கணும் புகழ்மணம் மலர்ந்தது; | |
| | |
| மாந்தர் வியந்துரை | |
| | |
| சுரிகுழற் பூங்கொடி சொற்றமிழ் இசையை மறுகிடைக் கேட்குநர் வழங்குதல் தவிர்த்துச் செயல்மறந் தாங்கண் சிந்தையும் உருகிக் | |
| கயல்விழி இசையின் கற்பனைத் திறனும் | 95 |
| பயில்வார்க் கோதும் பாங்கின் திறனும் நல்லிளம் பருவத்துப் பல்வகை இசையில் வல்லவ ளாகிய வகையும் கண்டு வியந்துரை கூறி வியநகர் மாந்தர் | |
| நயந்தன ராகி நல்கினர் வாழ்த்தொலி; | 100 |
| வாய்விட் டுரைத்து வாழ்த்திய மாந்தருள் தோய்மகிழ் மனத்துத் தூயோர் ஒருசிலர் கலைப்பணி ஒன்றே தலைப்பணி என்று | |
--------------------------------------------------------------- |
| ஊதுலைக்குருகு - துருத்தி, தண்ணுமை - மத்தளம், மறுகிடை - தெருக்களில். | |
| | |