பக்கம் எண் :

பக்கம் :148பூங்கொடி

 
  முன்னுதல் வேண்டும் முரணின ராயின்
பெண்மைக் கிழுக்கெனப் பேசுமிவ் வுலகம்
எண்ணித் துணிக' என்றனன் கோமகன்;
 
     
 

பூங்கொடியின் மறுமொழி

 
     
  பூங்கொடி அவன்மனம் புரிந்தன ளாகி  
  `வீங்கிய மனத்து விறலோய் கேண்மோ! 270
  மலர்தொறும் நன்மணம் மற்றவர் செயற்கையால்
நிலவுதல் இல்லை இயற்கையின் நிலைமை;
திருமண நினைவும் செயற்கையில் தோன்றி
வருவதும் இல்லை, மனத்தின் இயற்கை;
 
  இல்லறம் ஒருபெரும் நல்லறம் இதனை 275
  அல்லறம் எனநான் அயர்த்தும் புகலேன்;
தனிமை வாழ்வினும் துணையுடன் வாழ்வதே
இனிமை எனப்புவி இயம்பக் கேட்டுளேன்,
ஆயினும் பொதுப்பணி ஆற்றுவோர் சிற்சிலர்
 
  தோயுமிவ் வின்பம் துறப்பது மேலென 280
  ஆயும் புலத்தால் அறிந்துளேன் எனினும்
காவியும் மணியும் கடுவிலங் குரியும்
பூவிரி கானும் பூண்டேன் அல்லேன்,
உள்ளத் தெழூஉம் உணர்ச்சிகள் அடக்கி
 
  உள்ளம் துறந்தேன் உலகம் துறந்திலேன், 285
  எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது
தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ
இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க
மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன்,
 
  அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் 290
  தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்;  
     
 

ஒருதலைக் காமம்

 
     
  நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும்
பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி
ஆடவர் திரியின் யானென் செய்வல்?
 

---------------------------------------------------------------

  முரணினர் - மாறுபட்டனர், உரி - தோல் ஆடை, கான் - காடு, எழூஉம் - எழும், விழாஅது - விழாமல், ஒரீஇ - நீக்கி.