பக்கம் எண் :

கோமகன் மீண்டும் தோன்றிய காதைபக்கம் : 147

 
  குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு,
பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி
நழுவா வகையில் நயந்துரை மொழிந்திடு,
அழகிய அவளுடல் ஆடவன் நினக்கு
 
  விருந்தாம் நிலையில் வென்று திரும்புதி! 240
  பொருந்தா மனமும் திருந்திய தாகிப்
பொருந்தும் மணம்பெறப் பூவை தன்னொடு
திரும்புநன் னாளைத் தேர்ந்தெதிர் நோக்கிக்
கண்படை பெறாது காத்திவண் கிடப்பேன்
 
  திண்மன முடையாய் செல்லுதி' என்றனள்; 245
     
 

கோமகன் பூங்கொடியைச் சார்தல்

 
     
  வஞ்சி உரைத்தவை செஞ்சொல் எனக்கொண்டு
எஞ்சாச் செல்வன் எளிமையை னாகி
வேங்கை நகரில் பூங்கொடி தன்பால்
தேங்கிய ஆர்வலன் சேர்ந்தனன்; ஒரு நாள்
 
  தமியல் தானே நின்றவள் முன்னர்க் 250
  குறுகினன் சென்று `கூர்விழி நல்லாய்!
ஒருமொழி நின்பால் உரைத்திட விழைந்தேன்;
 
     
 

திருமணங் கொள்கெனச் செப்பல்

 
     
  சிறியவள் நீதான் திருமணம் பெறாஅது
துறவுளம் கொண்டு குறளகம் புக்க
 
  காரணம் என்கொல்? கடிமணம் கொள்ள 255
  ஆரணங் குன்னை அகத்தினில் நிறுத்தி
நாடொறும் தொழூஉம் ஆடவர் உளரெனச்
சேடிய ரேனும் செப்பிலர் கொல்லோ?
வாடிய இளங்கொடி வாழ்வை வெறுத்தது
 
  முறையன் றெனினும் உரிமைஎன் றாகும்; 260
  ஆயினும் பிறராம் ஆடவர் தம்மை
ஆயுள் முழுதும் அனலிடைப் புழுவென
வீயுறச் செய்வது வேல்விழி முறையோ?
சேயிழை! என்மொழி சினவா திதுகேள்!
 
  கன்னியர் என்போர் காதலை மதிக்க 265

---------------------------------------------------------------

  பூவை - பூங்கொடி, தொழூஉம் - தொழும், வீயுற - அழிய.