பக்கம் எண் :

பக்கம் :146பூங்கொடி

 
  வெண்ணெயின் உருகும் தன்மையை தாகும்;  
  ஐயா! நீயும் அவள்பாற் சென்று 210
  பொய்யா மனத்துப் பூத்துள காதலை
எய்யா துரைத்தனை யாயின் அந்தக்
கொய்யாக் கனியைக் கொய்திடல் ஆகும்;
ஒய்யென விரை'கெனக் கோமகற் குரைத்தலும்;
 
     
 

கோமகன் எழுச்சி

 
     
  திரியின் பிழம்பு சிறிது சிறிதாகக் 215
  குறுகி அணைந்து மறையும் நிலையில்
குறைதிரி தூண்டிக் குறையா நெய்யும்
ஊற்றிட நிமிர்ந்தொளி ஓங்குவ தென்னச்
சாற்றிய காமம் தளர்ந்திறும் நிலையில்
 
  வீற்றிருந் தோனை விறலி தூண்டி 220
  ஒல்கா ஆசையை ஊட்டின ளாகக்
கொல்லும் காமம் கொழுந்துவிட் டெழுந்து
செல்லும் குருதியில் சேர்ந்துடல் கனல,
`ஒருவர்நெஞ் சொருவர் உற்றறி கில்லேம்;
 
  அறியாப் பிழைக்கும் உரியவன் யானே; 225
  இருவர் மனமும் இவ்வணம் துயருறல்
சரியிலை; இன்றே சார்ந்தவட் குரைப்பேன்;
யாண்டுளாள் பூங்கொடி? யாங்ஙனம் அணுகுதல்
வேண்டும்? விறலீ! விளம்புதி கொல்லோ?'
 
  என்றுளம் ஏங்கி இரங்கினன் வேண்ட, 230
     
 

பூங்கொடியை அடையும்வழி

 
     
  `வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள்
பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை
ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி
நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி
 
  ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில் 235

---------------------------------------------------------------

  எய்யாது - சளைக்காமல், ஒய் - விரைவுக்குறிப்பு. ஒல்கா - அடங்காத, கனல - எரிக்க.