பக்கம் எண் :

கோமகன் மீண்டும் தோன்றிய காதைபக்கம் : 145

 

 
     
 

வஞ்சியின் எழுச்சியுரை

 
     
  கருதிய காதற் களந்தனில் நீதான்  
  ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180
  காதல் எளிதெனக் கருதினை போலும்
சாதல் எய்தினும் சலியா துழைப்பின்
விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி;
நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை
 
  தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின் 185
  ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ?
நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம்
எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது?
மறுத்தும் வெறுத்தும் மாறியும் சீறியும்
 
  தடுத்தும் உரைப்பதே தையலர் இயல்பு; 190
  தொடுத்து முயன்றால் தோள்புணை யாகக்
கொடுத்தல் உறுதி; கோமகன் நீயும்
அடுத்தடுத் தவள்பால் அணுகுதல் வேண்டும்;
தோல்வி கண்டுளம் துவளுவை யாயின்
 
  பால்மொழி நின்பால் பரிவுறல் யாங்ஙனம்? 195
  மறுத்தனள் அவளென உரைத்தனை இளைஞ!
ஒருத்தி யவள்முனம் ஒருமுறை யேனும்
கருத்தினை விளக்கிக் கழறிய துண்டோ?
அவள்கருத் துன்பால் அறைந்ததும் உண்டோ?
 
  மூங்கை நிலையில் மொழியா திருந்துபின் 200
  ஆங்கவள் நெஞ்சம் அளித்திலள் என்றே
வீண்குறை கூறினை; தனிமையில் அவளைக்
காண்கிலை வீணில் கலங்குதி மடவோய்!
ஆதலின் அறிவ! அவள்பாற் செல்லுதி!
 
  எத்திறத் தவள்மனம் உவக்கும் எனவுணர்ந்து 205
  அத்திறத் தானே அணுகுதி பயன்தரும்;
பெண்மனம் என்பது கன்மனம் அன்றே
உண்மையின் விரும்பும் ஒருவனைக் காண்புழி
 

---------------------------------------------------------------

  பால்மொழி - பூங்கொடி,