பக்கம் எண் :

பக்கம் : 21

 

பூங்கொடி

 
 

தமிழ்த் தெய்வ வணக்கம்

 
     
  தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங்
கிலையென்றால் இன்பமெனக் கேது.
 
  பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும்
ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் - நாவாழும்
மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே
சாவா வரமெனக்குத் தா.
 
  தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே
என்பால் அரும்பி எழுமுணர்வை - அன்பால்
தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்
அடிக்கே எனையாண் டருள்.