பக்கம் எண் :

பக்கம் :32

3. பூங்கா புக்க காதை

பூங்கொடி அழுகை

 

 

தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை
ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும்
பூங்கொடி செவியிற் புகுந்தது; புகுதலும்
ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி
 
  படபடத் தாலெனப் பதைத்தனள் நெஞ்சம்;
மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக்
கடமை யாற்றுழிக் கைதவ மாந்தரால்
பெற்றோ ரீங்குப் பட்டவெந் துயரால்
உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி
5
  வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது;
கண்ணீ ரிடைவிரி கருவிளை மலரென
எண்ணும் படிக்கிரு கண்களும் இலங்கின;
சுமையாய்த் துயரம் சுமந்திடற் கியலா
அமயத் திருப்போர் அழுதிடல் இயல்பே;
10
  அழுதிடல் ஏனெனின் அப்பெருந் துயரைக்
கழுவும் ஆற்றல் கண்ணீர்க் குளதென
நம்புவர்; அதனால் நலிவுங் குறைகுவர்;
பூங்கொடி தனக்கோ பொங்கிய துயரம்
நீங்கிற் றிலது நெஞ்சம் விம்மத்
15
  தேம்பித் தேம்பித் தெரிவை அழுதனள்; 20
     

பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

     
  பூங்கொடி கண்ணீர் புத்தகம் நனைத்திட
ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக்
 

---------------------------------------------------------------

  ஆன் - பசு, அருட்பா - திருவருட்பா, பெருவளி - பெருங்காற்று, கொளீஇ - கொண்டு, கைதவம் - வஞ்சகம், உள் - மனம்.