பக்கம் எண் :

பழியுரை காதைபக்கம் : 31

 

உழைப்பினை உதவுக

 
     
  கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி  
  மேவிய விருப்பால் மேலோர் சிலரோடு
ஒல்லும் வகையால் உழைத்தும், ஊர்தொறும்
சொல்லியும் வருதல் தொழிலெனக் கொண்டுளேன்;
அச்செயல் ஆற்ற அரிவையர் சிலரும்
நச்சின ராகி உழைப்பினை நல்கின்
95
  மெச்சிடும் வெற்றி மேவுதல் திண்ணம்,
என்றனர் யானும் எழிற்பூங் கொடியும்
ஒன்றிய உணர்வால் ஒப்புதல் தந்தோம்;
சென்றுநீ தாய்க்கும் பிறர்க்கும் செப்'பெனச்
100
  சென்றனள் தேன்மொழி செயலற வுற்றே. 104