பக்கம் எண் :

பக்கம் :30பூங்கொடி

  பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர்;  
  சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர்,
அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே
வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்;
நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய
கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர்
70
  தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி
நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை
அந்தோ தூக்கி ஆருயிர் வவ்வினர்;
இந்தவெந் நிலையில் இசைத்தொழில் புரிவதோ?
75
     
 

மலையுறை அடிகள் வருகை தருதல்

 
     
  வெந்துயர் வாட்ட வேலரின் நினைவால்  
  மனநலி வெய்தி மனையுறை நாளில்,
நினையா நிலையில் நீளருட் செல்வர்
மலையுறை யடிகள் வந்துநின் றருளினர்
துயரம் நீங்கச் சொற்றனர் சிலசொல்;
80
     
 

அடிகளார் அறிவுரை

 
     
  `மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை;  
  யாதே முயலினும் தடுத்திடல் அரிதே!
பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன்
பிறரெவ ரும்பொறாப் பெருநிலை பெறவே
ஆருயிர் ஈந்தனன் அவனோர் வீரன்;
வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து
85
  புரிந்தனி ராயின் பொருந்திய துயரம்
முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின்
முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி
உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக,
90

---------------------------------------------------------------

  விஞ்சிய - மிகுந்த.