பக்கம் எண் :

பழியுரை காதைபக்கம் : 29

  கலப்பு மணத்தைக் கடிந்துரை யாடினர்;
கலைத்தொழில் புரிந்தேன் கற்பினைப் பழித்தனர்;
மலைத்திலேன் சிறிதும், மனமுங் கூசிலேன்;
45
     
 

வள்ளி குறிக்கோள் வாழ்வினள்

 
     
  அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி,
எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று
 
  துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்;
என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்;
பொதுநலத் தொண்டே புந்தியிற் பதித்தவள்;
எதுசரி எனமனம் ஏற்குமோ அதனைத்
துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும்
50
  அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்;
அடிமை வாழ்வில் அருவருப் புற்று
விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த
நல்லவன் ஒருவனை நாய்மகன் சுடுங்கால்
ஒல்லென ஓடி ஒப்புயர் வில்லாள்
55
  தன்னெஞ் சேற்றுத் தான்மடிந் தனளே! 60
  இசைத்தொழில் புரியும் இவள்இத் தொழிலை
வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல்?
 
     
 

வள்ளியின் மகளே பூங்கொடி

 
     
  வன்னெஞ் சினர்அவ் வள்ளியின் வாழ்வை
இகழ்ந்ததும் அறிவேன்; என்வயி றீன்ற
மகளே யாயினும் வள்ளியின் மகளே
பூங்கொடி என்று பொருந்தினேன் ஆதலின்
 
  ஆங்கவள் தன்னை இசைத்துறை அறுத்துப்
பாங்குடன் பொதுநலப் பணிக்கே ஆக்கினென்;
65
     
 

வடிவேல் படுகொலை

 
     
  ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர்
நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு
 

---------------------------------------------------------------

  என்பு - எலும்பு, புந்தி - மனம், இயைந்தவள் - பொருந்தியவள்.