பக்கம் எண் :

பக்கம் :28பூங்கொடி

  நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே
ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல்
தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால்
உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால்
 
  குழலும் யாழும் கொட்டம் அடங்கின; 25
  பாடும் முறையாற் பாவை பாடுவாள்;
ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள்
நாடாள், அந்த நல்லிசைச் செல்வி
வாயிதழ் விரியின் வானிசை கேட்கும்;
 
  சேயிதழ் மலர்க்கை தாளச் சீர்இடும்; 30
  அன்னவள் காணா அரங்கம் இல்லை;
பொன்மிகக் குவித்தாள் புகழோ மிகுத்தாள்;
 
     
 

ஊரார் பழிமொழி

 
     
  இசைத்தொழில் புரியும் இவள்இத் தொழிலை
வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல்?
 
  செருக்கினள் கொல்லோ? செல்வம் மிகவாப் 35
  பெருக்கினள் கொல்லோ? என்றுரை பேசி
ஏளனம் செய்தனர்' என்ற தேன்மொழிக்கு
 
     
 

அருண்மொழி அலருக்குக் கூசாமை

 
     
  அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்;
`பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும்
 
  நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே;
ஆருயிர்த்தோழி! அந்நாள் வடிவேற்
பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்
கொழுநர் என்று கொண்டபின் ஊரார்
இழிசொல் எத்துணை ஏசினர் அறியாய்?
40

---------------------------------------------------------------

  நசை - விருப்பம், கொட்டம் - செருக்கு, நாடாள் - விரும்பாள், வானிசை - உயர்ந்த இசை, செம்மல் - சிறந்த ஆடவர், கொழுநர் - கணவர்.