பக்கம் எண் :

பக்கம் : 27

2. பழியுரை காதை

வஞ்சியின் கவலை

 

 

முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட
நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த
பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி
இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம்
 
  தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் 5
  தைத்திரு நாளில் தமிழிசை வழங்க
வாராத் துயரால் மயங்கிய வஞ்சி
சோரா நின்றனள்; தன்மகட் டோழி
தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும்
 
  தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள்; 10
     
 

தேன்மொழி செல்லல்

 
     
  அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி நிலைக்கு
வெவ்வுயிர்த் தேங்கும் வினையினள் ஆதலின்
பூங்கொடி தன்னோ டருண்மொழி வைகும்
பாங்குடை இல்லிற் புகுந்தனள் பாங்கி;
 
  அருண்மொழி மேனி அழிநலங் கண்டு 15
  மருண்மனங் கொண்டு `மங்காய்! நின்னை
இவ்வூர் மாக்கள் இகழ்ந்துரை கூறினர்;
 
     
 

அருண்மெழியின் இசைப்புலமை

 
    
  செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன
அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி
 
  இசைபல முயன்று வசையற வுணர்ந்து 20

---------------------------------------------------------------

  கூஉய் - அழைத்து, வைகும் - தங்கும், மருள் - மயக்கம், மாக்கள் - மக்கள்