பக்கம் எண் :

பக்கம் :26பூங்கொடி

  அஞ்சில ராகி நெஞ்சுரங் காட்டிக்
குழுவினர் நடுங்கத் தழுவுதல் கண்டு
 
  வஞ்சியர் களித்தனர் வாழ்த்தொலி கூவினர்; 70
     
 

கலை நிகழ்ச்சி

 
     
  அறிஞர் ஒருபால் ஆய்வுரை நிகழ்த்தினர்,
கலைபயில் கூத்தினைக் கண்கவர் அரங்கில்
இலைநிகர் எனுமா றேற்றினர் கலைஞர்;
இசையொடு கடலொலி பிறக்கிட எழுந்தது,
 
  வசையெனப் பிறமொழிப் பாடல்கள் வழங்கிலர் 75
  தமிழே இனிமைத் தமிழே இசைத்தனர்,
மணிநகர் எங்கணும் மாபெருந் திருநாள்
 
  அணிபெறத் திகழ்ந்தது ஆர்ப்பொலி யுடனே. 78