| வாழிய வாழிய | |
| | |
| காரினம் மழையைக் கரவா தருள்க; | 45 |
| பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல்; செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கள் வாழிய திருநாள்' | |
| என்னுமிவ் வறிக்கை எங்கணும் பறந்தது; | 50 |
| | |
| பொங்கற் கொண்டாட்டம் | |
| | |
| பொழிபனி கழியப் பொங்கலும் வந்தது; எழில்பெறச் செய்தனர் இல்லந் தோறும் வெண்ணிறச் சுண்ணம் விளைத்தது தூய்மை; கண்கவர் முறையிற் கட்டினர் தோரணம்; | |
| வண்ணப் புத்துடை வகைவகை பூண்டு | 55 |
| கன்னல் துண்டினைக் கடித்திடும் சிறுமகார் தெருவினில் ஓடித் திரிந்தனர் யாண்டும்; கருவிழி மகளிர் கடும்புனல் ஆடித் தறிதரும் ஆடை தரித்தனர் ஆகி | |
| நெய்வழி பொங்கல் செய்ம்முறை செய்து | 60 |
| கைவணம் காட்டிக் காதலர் மகிழப் |படைத்தனர் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்தனர்; கடைத்தெரு வெங்கணும் களிகொள் ஆட்டம்; | |
| | |
| ஏறு தழுவினர் | |
| | |
| கவைபடு கூரிய காளையின் கொம்பிடைத் | |
| துவைபடத் தழுவிச் சுற்றிய துணிமணி | 65 |
| அவிழ்த்தன ராகி ஆர்த்தனர் காளையர்; அன்பிற் குரிய ஆடவர் காளையை | |
--------------------------------------------------------------- |
| கார் - மேகம், கன்னல் - கரும்பு, சிறுமகார் - சிறுவர்கள், கவைபடு - வளைந்த, துவைபட - அழுத்தமுற. | |
| | |