| நச்சி ஒருசிலர் நாட்டு மக்கட்கு ஆய்ந்து வரைந்ததோர் அறிக்கை அனுப்பினர்; | |
| | |
| விழாக் கொண்டாடுக | |
| | |
| `தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள் | |
| உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் | 25 |
| சளைப்பிலா முயற்சி தருபயன் பெற்றுப் புதுமை இன்பம் பூணும் நன்னாள் இதுவே பெருவிழா எனக்கொண் டாடுக; ஆங்காங் குறையுநர் அயலவர் பண்புகள் | |
| நீங்கிய திருநாள் நினைந்திதைப் பேணுக; | 30 |
| பிறபிற பண்புகள் பேணிய போதும் நமக்கென மொழியும் நாளும் உளவென உலகம் அறிய உணர்த்துவம் வாரீர்; | |
| | |
| நகரை அணிசெய்க | |
| | |
| பலவகைத் தோரணம் பாங்குடன் நாற்றுமின் | |
| வளர்குலைக் கமுகும் வாழையுங் கட்டுமின் | 35 |
| கிளரொளி மாடங் கிளைபடு குடிசை யாங்கணும் யாங்கணும் ஓங்குக இன்பம்; | |
| | |
| ஒற்றுமை பரப்புக | |
| | |
| எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் | |
| மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே | 40 |
| வழியெனக் கருதி வழங்குக பேருரை; முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிந்தைவிட் டகற்றுக ஓரினம் நாமென உன்னுக பெரிதே; | |
--------------------------------------------------------------- |
| நாற்றுமின் - தொங்கவிடுவீர். யாண்டும் - எங்கும், உன்னுக - நினைக. | |
| | |