பக்கம் எண் :

பக்கம் : 23

1. விழாவயர் காதை

தமிழகச் சிறப்பு

 

 

அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய
நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும்
நாவலந் தீவின் நாடியாய் விளங்கும்
பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம்
 
  மேவலர் அணுகா வீரங் கெழுமிய 5
  காவலர் மூவர் கயல்புலி வில்லெனும்
கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது;
சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப்
பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு;
 
  `யாதும் ஊரே யாவரும் கேளிர்'என் 10
  றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி
வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை
தருவது தொழிலாத் தான்கொண் டதுவே;
 
     
 

பொங்கல் வந்தது

 
     
  அயலவர் மொழிக்கெலாம் ஆளுகை தருதல்  
  தவறென உணரார் தாய்மொழி ஈங்குச் 15
  சிறுகச் சிறுகச் சீரிழந் தேகுதல்
அறியக் காணார் அயர்ந்தனர்; அந்நாள்
பொங்கல் நாளெனும் மங்கலத் திருநாள்
எங்கணும் மகிழ்ச்சி இலங்கிட வந்தது;
 
     
 

அறிக்கை விடுதல்

 
     
  கட்சி சமயங் கருதிடா நல்லோர் 20

---------------------------------------------------------------

  உடீஇய - உடுத்த, மேவலர் - பகைவர், கெழுமிய - பொருந்திய, கோலோச்சியது - செங்கோல் செலுத்தியது, நிறீஇ - நிறுவி, கேளிர் - உறவினர், ஆளுகை - ஆட்சி, இலங்கிட - விளங்கிட.