பக்கம் எண் :

பக்கம் :36பூங்கொடி

  கொடியவர் செல்லும் கூடம தாகும்;
அன்பும் பண்பும் ஆர்ந்தவர் நிறையும்
தென்புலப் பொழிற்கே செல்லுதற் குரியள்'
என்பன கூறி எழுந்துபூங் கொடியொடு
காவண மறுகுகள் கடந்துபல் பொருள்பகர்
90
  ஆவண வழியே படர்ந்தன ளாக; 95
     
 

கண்டோர் கவலை

 
     
  வழியிற் காண்போர் விழிவாங் காமல்
`எழில்நிறை யிவளை இல்லறப் படுத்தா
தல்லல் நிறைதொண் டாற்றுப் படுத்தினள்
கொடியள் இவள்தாய் கொடியள்' என்று
 
  வடிகண் ணீரர் வருந்தி அரற்ற, 100
     
 

பொழிலுட் புகுதல்

 
     
  அடிமலர் படிமிசைப் பொருந்தப் பூங்கொடி
ஓவியம் என்ன ஒசிந்து நடந்து,
காவியம் வல்லான் கற்பனை பெருக்க
எழுதரு சோலை எழில்காண் புறவே
 
  பழுதறு பாவை நுழைந்தனள் பொழிலே. 105

---------------------------------------------------------------

  காவணம் - பந்தல், மறுகு - தெரு, ஆவணம் - கடைத்தெரு, படிமிசை - நிலத்தின்மேல், ஒசிந்து - அசைந்து, எழுதரு - உயர்ந்த, பழுதறு - குற்றமற்ற, பொழில் - பூங்கா.