| கொடியவர் செல்லும் கூடம தாகும்; அன்பும் பண்பும் ஆர்ந்தவர் நிறையும் தென்புலப் பொழிற்கே செல்லுதற் குரியள்' என்பன கூறி எழுந்துபூங் கொடியொடு காவண மறுகுகள் கடந்துபல் பொருள்பகர் | 90 |
| ஆவண வழியே படர்ந்தன ளாக; | 95 |
| | |
| கண்டோர் கவலை | |
| | |
| வழியிற் காண்போர் விழிவாங் காமல் `எழில்நிறை யிவளை இல்லறப் படுத்தா தல்லல் நிறைதொண் டாற்றுப் படுத்தினள் கொடியள் இவள்தாய் கொடியள்' என்று | |
| வடிகண் ணீரர் வருந்தி அரற்ற, | 100 |
| | |
| பொழிலுட் புகுதல் | |
| | |
| அடிமலர் படிமிசைப் பொருந்தப் பூங்கொடி ஓவியம் என்ன ஒசிந்து நடந்து, காவியம் வல்லான் கற்பனை பெருக்க எழுதரு சோலை எழில்காண் புறவே | |
| பழுதறு பாவை நுழைந்தனள் பொழிலே. | 105 |
--------------------------------------------------------------- |
| காவணம் - பந்தல், மறுகு - தெரு, ஆவணம் - கடைத்தெரு, படிமிசை - நிலத்தின்மேல், ஒசிந்து - அசைந்து, எழுதரு - உயர்ந்த, பழுதறு - குற்றமற்ற, பொழில் - பூங்கா. | |
| | |