| நிலவிய பொதுப்பணி நேர்வோர் தமக்குத் தடையாம் இல்லறம் தவிர்ந்தேன்; நெஞ்சுரம் உடையார் எந்தை உழைத்தஅப் பணியே | |
| தலையாக் கொண்டேன் தையால்! மணஞ்செயின் | 25 |
|
குடும்பக் கவர்ச்சி |
|
| உலைவாய்ப் பட்ட இரும்பென உருகி வளைந்து நெளிந்து வாழ்தல் வேண்டும்; குழந்தை கணவன் குடும்பம் என்றெலாம் எண்ணம் விரியும், இடும்பைகள் பெருகும்; | |
| தன்னல மறுப்பெனும் நெருப்பினுள் மூழ்க | 30 |
| உன்னுங் காலை உளந்துணி யாதே! அன்னாய்! அதனால் துறந்தனென் இல்லறம்; | |
|
கடல்நகர் வந்தமை கூறல் |
| இயல்பினில் வாய்த்தது இத்துற வுள்ளம், மயலொரு சிறிதும் இல்லேன்; மலையுறை | |
| அடிகள் குறளகம் அண்டினேன், உய்ந்தேன்; | 35 |
| கடிகமழ் தாமரைக் கண்ணிதன் துணையால் இந்நகர் வந்திவண் இறுத்தனென், அதன்றலைப் பன்னரும் பெருமைப் பழந்தொல் காப்பியப் பொருள்நூல் உணர்ந்தேன்; புகன்றேன் என்னிலை; | |
| அருள்விழி! நீயார் அறை'கென மொழிதலும், | 40 |
| | |
| மூதாட்டி தன் வரலாறுரைத்தல் | |
| | |
| வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்; `முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச் செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும் புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்துஅப் | |
--------------------------------------------------------------- |
| உய்ந்தேன் - பிழைத்தேன், கடிகமழ் - மணங்கமழும், இறுத்தனென் - தங்கினேன், அதன்றலை - அதன்மேலும், பன்னரும் - கூறஇயலாத. | |
| | |