| புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன், | 45 |
| நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும் அல்லும் பகலும் செல்லும் சிதலும் சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சிய குறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ! | |
| தமிழுக் குறுபகை எத்தனை தாயே! | 50 |
| அமுதத் தமிழே! அன்னாய்! வாழி! அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம் நவையற நிறுவி தடத்துதல் என்பணி, நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்; | |
|
வாழ்த்தும் பாராட்டும் |
|
| ஆவல் தமிழில் அளவிலா துற்றனை! | 35 |
| குறள்நூல் தொல்காப் பியநூல் இரண்டும் மறுவற உணர்ந்தோர் தெருளறி வுறுவர், வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின் துறவு! உன்போல் துறவுளம் உடையவர் ஒருசிலர் | |
| அன்பால் தமிழின் ஆக்கங் கருதித் | 60 |
| துயரெது வரினும் துச்சமென் றெண்ணி அயர்வில ராகி ஆற்றத் துணியின் உயர்தனிச் செம்மொழி உலகினில் ஓங்கும்; | |
|
கலைமகள் நிலையம் |
| அண்மையில் ஓரூர், அவ்வூர் அரசன் | |
| கண்ணெனக் கருதிக் கலைநூல் பலவும் | 65 |
| தொகுத்தொரு நூலகந் தொடங்கி நிரல்பட வகுத்து வைத்தனன், வகைவகை ஏடுகள் நிறைந்தன அதன்பேர், கலைமகள் நிலையம், மறைந்தனன் கலையுணர் மன்னன், அவ்வூர் | |
| அயலவர் ஆட்சியிற் சிக்கிய ததனால் | 70 |
--------------------------------------------------------------- |
| செல், சிதல் - கறையான் வகை, துச்சம் - நிலையின்மை, நிரல்பட - வரிசையாக. | |
| | |