பக்கம் எண் :

ஏடுபெற்ற காதைபக்கம் : 79

  புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன், 45
  நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும்
அல்லும் பகலும் செல்லும் சிதலும்
சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சிய
குறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ!
 
  தமிழுக் குறுபகை எத்தனை தாயே! 50
  அமுதத் தமிழே! அன்னாய்! வாழி!
அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம்
நவையற நிறுவி தடத்துதல் என்பணி,
நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்;
 
 

வாழ்த்தும் பாராட்டும்

 
  ஆவல் தமிழில் அளவிலா துற்றனை! 35
  குறள்நூல் தொல்காப் பியநூல் இரண்டும்
மறுவற உணர்ந்தோர் தெருளறி வுறுவர்,
வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின் துறவு!
உன்போல் துறவுளம் உடையவர் ஒருசிலர்
 
  அன்பால் தமிழின் ஆக்கங் கருதித் 60
  துயரெது வரினும் துச்சமென் றெண்ணி
அயர்வில ராகி ஆற்றத் துணியின்
உயர்தனிச் செம்மொழி உலகினில் ஓங்கும்;
 
 

கலைமகள் நிலையம்

  அண்மையில் ஓரூர், அவ்வூர் அரசன்  
  கண்ணெனக் கருதிக் கலைநூல் பலவும் 65
  தொகுத்தொரு நூலகந் தொடங்கி நிரல்பட
வகுத்து வைத்தனன், வகைவகை ஏடுகள்
நிறைந்தன அதன்பேர், கலைமகள் நிலையம்,
மறைந்தனன் கலையுணர் மன்னன், அவ்வூர்
 
  அயலவர் ஆட்சியிற் சிக்கிய ததனால் 70

---------------------------------------------------------------

  செல், சிதல் - கறையான் வகை, துச்சம் - நிலையின்மை, நிரல்பட - வரிசையாக.