| செயல்படல் இன்றிச் சிதைந்தது நூலகம்; வீடுகள் தோறும் ஏடுகள் தேடிப் பாடுகள் உறும்யான் பயன்தரும் எனநினைந் தோடினென் ஆங்கே தேடினென் ஏடுகள்; | |
|
சிதைந்த சுவடிகள் |
|
| தென்மொழி வடமொழி தெலுங்கு முதலாப் | 75 |
| பன்மொழி ஏடுகள் பற்பல கண்டேன், ஓவியம் சிற்பம் மருத்துவம் ஒண்டமிழ்ப் பாவினில் உரைக்கும் ஏடுகள் கண்டேன், வானநூல் ஏடும் வகைவகை கண்டேன், | |
| ஊனம் இலாத தொன்றும் இல்லை; | 80 |
| முதலும் முடிவும் காணாச் சுவடிகள், சிதலும் மண்ணும் சிதைத்த சுவடிகள் கண்டேன் கண்டேன் கலங்கினென் உள்ளம்; | |
|
எரிந்த ஏடுகள் |
|
| அண்டையில் நின்ற அந்நூல் நிலையப் | |
| பணியாள் தன்பாற் பரிந்து வினவினென், | 85 |
| இன்னும் உளவோ ஏடுகள் என்னவும் `அன்னாய்! ஏடுபல் லாயிரம் இருந்தன, வெந்நீர் வேண்டி விறகென அவற்றை எரித்தோம்' என்றனன்; துடித்ததென் மனனே; | |
| எரித்தஅவ் வேடுகள் எத்தகு நூலோ! | 90 |
| கலைமகள் தமிழைக் காப்பதிப் படியோ! கொலைமிகு நெஞ்சர் கொடுமைதான் என்னே! வெந்நீர் பாய்ச்சி, மிகுபயன் நல்கும் கன்னல் தமிழ்ப்பயிர் கருகிட முனைந்தனர்; | |
| என்னே! என்னே! இவர்தம் மதிதான்! | 95 |
| மடமை என்கோ? கொடுமை என்கோ? | |
--------------------------------------------------------------- |
| பாடுகள் - துன்பங்கள், ஊனம் - குறை. | |
| | |