| படம்விரி யரவுக்குப் பசுப்பால் வார்த்தோம்! உடனுறை வாழ்வும் உவந்ததற் களித்தோம்! | |
|
மனத்துயரம் |
|
| அச்சகத் தொழிலோன் அவன்மனை யாட்டி | |
| மகப்பெறு நிலையில் மிகப்பெருந் துயரால் | 100 |
| வருந்துதல் கேட்டு விரைந்தவன் தொழிலைத் திருந்த முடித்து வரும்பொருள் பெற்று வீடு செல்ல விழைந்தவன் எடுக்கக் கூடும் எழுத்துக் குலைந்து சிதறி | |
| வீழ்ந்திடக் கண்டு வெதும்புதல் போல | 105 |
| என்மனம் கலங்கி ஏடுகள் பார்த்தேன்; | |
|
இருபெருஞ் சுவடிகள் |
|
| கூத்தும் இசையும் கூறும் இருநூல் ஏத்தும் படியாய் என்விழிப் பட்டன; வாழ்த்துக் கூறி மகிழ்ந்தவை புரட்டினேன்; | |
| நெருப்பாற் புண்படு நெஞ்சம் வேதுபெற் | 110 |
| றிருப்பது போல இன்பம் விளைந்தது; இசையும் கூத்தும் தமிழில் இலைஎனும் வசைமொழி கூறி வருவோர் மடமை தொலைக்கஇவ் விருநூல் துணைசெயும் எனநான் | |
| விலைக்குப் பெற்றவ் வேடுகள் கொணர்ந்தேன்; | 115 |
| | |
| மூதாட்டி சுவடிகள் தருதல் | |
| | |
| நானிவை பிரித்துப் பயிலும் நாளில் மீனவன் என்னும் மேலோன் கையன இந்நற் சுவடிகள் என்ப துணர்ந்தேன்; மின்னற் கொடியே! மிகுபயன் தருமிவ் | |
| வேடுகள் நின்பால் இருந்திடல் நலமாம்; | 120 |
| கூடிய ஆண்டெனைக் கூடிய ததனால் இவைநீ கைக்கொண் டியற்றுக நற்பணி; | |
--------------------------------------------------------------- |
| அரவு - பாம்பு, கையன - கையிலிருந்தன. | |
| | |