பூங்கொடி சுவடிகள் பெறுதல் |
|
| நவையிலாய்! நின்னூர் ஆங்கண் நாடொறும் அன்பாற் பணிபுரி மலையுறை யடிகள் | |
| தம்பால் இவற்றின் தகவெலாம் கேட்குவை' | 125 |
| என்றவள் உரைத்தலும் இளையவள் மகிழ்ந்து `நன்றுநன் றன்னாய்' என்றவள் மொழிந்து வணங்கித் தொழுது வாங்கினள் செங்கையில்; | |
|
பூங்கொடியின் பூரிப்பு |
|
| அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க | |
| `அன்னாய்! என்னுயிர் அன்னாய்! தமிழே! | 130 |
| ஒன்னார் மனமும் உருக்குந் தமிழே! அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே! தகப்பன் தாயெனத் தகுவழி காட்டி மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே! | |
| உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால் | 135 |
| கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே! இறக்கும் வரைநின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே! இடுக்கண் வருங்கால் துடைப்பாய் தமிழே! | |
| மொழிவளம் மிகுந்தாய் முதன்மைத் தமிழே! | 140 |
| பழியிலா நின்னைத் தொழுதக வல்லது வாழ்த்துதற் கென்வாய் வகையறி யாதே' | |
| | |
| பூங்கொடி தாயகம் மீளல் | |
| | |
| இவ்வணம் பலபட இசைத்து, முதுமை கவ்விய அன்னையைக் கைகுவித் தேத்திப் | |
| பவ்வங் கடந்து பாவை பூங்கொடி | 145 |
--------------------------------------------------------------- |
| அணங்கு - பூங்கொடி, ஒன்னார் - பகைவர், துறக்கம் - வீடுபேறு, பவ்வம் - கடல். | |
| | |