பக்கம் எண் :

மனோன்மணீயம்
115

நாரா,

தெளிநீ சிறிது!


ஜீவ,

குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்!

(எழுந்து சோர்வாயிருக்க)


நாரா, 45.

இழந்தா லிருப்பளோ? என்செயத் துணிந்தாய்?
ஜீவ, நஞ்சே யெனக்கியான்! என்செய் வேனினி!
இருதலைக் கொள்ளியி லெறும்பா னேனே!
செருமுகத்து இரிந்தென் மானஞ் செகுத்தும்
உயிரினை யோம்பவோ வுற்றது? ஓர்சிறு

50.மயிரினை யிழக்கினு மாயுமே கவரிமா.
பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி
மருந்தா யெனக்கே யிருந்ததே நாரணா !

நாரா,

மன்னவ ! யார்க்குந் தன்னுடல் மாய்த்தல்
அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக்

55.

கருதிய தமரைக் காட்டிவிட் டோடி
யொளிப்பதோ வீரமென் றுன்னினை?


ஜீவ,

ஓ! ஓ!

போரிடை யோடுவோன் வீரம்நா டுவனோ?

நாரா,

காலமுங் களமுங் கண்டு திரும்புதல்
சாலவும் வீரமே. தக்கவை யுணருந்

60.

தன்மையில் சௌரியம் மடமே. சூழ்ச்சிசேர்
வன்மையே வீரத் துயிராம் மன்னவ!

 


ஜீவ,

போதும்! போதுநின் போலி நியாயம்!
சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச்
சூதக வுடம்பைச் சுமக்கத் துணிந்தேன்.

65.

மன்னனு மல்லன். வழுதியு மல்லன்!

(சேவகரை நோக்கி)

என்னுட னிருமின்! ஏன்நிற் கின்றீர்?


முதற்சேவ,இறைவ! ஈதென்னை!

ஜீவ,

இறைவனென் றென்னை

யிசைப்பது வசையே. இஃதோ காண்மின்!
அசைந்த தொருநிழல் அஃதே யானெனப்

70.பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான்.