| ஜீவகன். | 20. | கெடுத்தே னையோ ! கெடுத்தேன் ! நாணம் விடுத்துயி ரின்னும் வீணில் தரித்தேன். ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் றொல்குலம் பட்டபா டின்றுமற் |
| 25. | றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே! மாசறு மணியே! அழியாப் பழிப்புனக் காக்கவோ வுனது வழியா யுதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த |
| 30. | முன்னோர் தம்மு ளின்னார்க் கிரிந்து மாண்டவ ரன்றி மீண்டவ ருளரோ! யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி. (பற்கடித்து) போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் |
| 35. | கார்முக மென்செய ! கடிவா ளென்செய ! |
| | ஓ ! ஓ ! இதனா லுண்டோர் பெரும்பயன். |
| | (மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகரோடி வர) |
| | போ ! போ ! வெளியே போரிடைப் பொலியாது வாளா விருந்த வாளுக் கீதோ (நாராயணன் வர) எனாதுயி ரீவன். வினவுவர் யாவர்? |
| நாரா, | 40. | மனோன்மணி தன்னை மறந்தாய் போலும் ! |
| ஜீவ, | | குழந்தாய்! குழந்தாய்! - | | | (விழுந்து மூர்ச்சிக்க) |
| நாரா, | | பேசன்மின் ! | | | (அரசனை மடியிற் றாங்கி) |
|
|
|