நான்காம் அங்கம் 3-வது களம் இடம் : அரண்மனையிலொரு சார். காலம் : நண்பகல் ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க : சேவகர் வாயில்காக்க. |
| முதற்சேவகன். | | செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ ஆறுதல் கூறுவம்? |
| 2-ம் சேவகன். | | கூறலும் வீணே ! |
| | பெருத்த துயரிற் பேசுந் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். |
| 3-ம் சேவ, | 5. | பணிந்தியா மருகே நிற்போ மன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? |
| 4-ம் சேவ, | | நாரா யணரேல் தீரமாய் மொழிவர். |
| 3-ம் சேவ, | | மெய்ம்மை! மெய்ம்மை! விளம்புவர் செம்மையாய் ! |
| முதற்சேவ, | | எங்குமற் றவர்தர மேகினர்? உணர்வைகொல்? |
| 4-ம் சேவ, | 10. | மங்கைவாழ் மனைக்குநே ரோடுதல் கண்டேன். |
| 2-ம் சேவ, | | சகிப்பளோ கேட்கில் தமியள்- |
| | மகளா லன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றர் போலும். ஆ ! ஆ ! |
| 2-ம் சேவ, | | நாரா யணரே நன்மதி யுடையோர். |
| 4-ம் சேவ, | 15. | பாரீர் ! இன்றவர் பண்ணிய சாகசம். இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல்- (ஜீவகன் எழுந்து நடக்க) |
| 3-ம் சேவ, | | அரச னஃதோ வெழுந்தான் காணீர். |
| முதற்சேவ, | | உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவ ணிற்பீர். அமைதி ! அமைதி ! |
|
|
|