| | மனவலி யொல்கலை. மானமே பெரிது. சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும். |
| 265. | புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல். மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்துபின் னின்று வாழ்ந்தது மன்று! மாற்றார் தமக்கு மதிகுல மாலையும் ஆற்றி னீருடன்நம் மாண்மையு மளித்து |
| 270. | நாணா துலக மாளல்போல் நடித்தல் நாணாற் பாவை யுயிர்மருட் டுதலே. ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினுங் கெட்டா னெனப்பட லன்றே கீர்த்தி? அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய். |
| 275. | எதுவா யினும்வரில் வருக. ஒருவனை வணங்கியா னிணங்குவ னெனநீ மதியேல், (எழுந்து) வருவோம் நொடியில். மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம். கருதுவ பலவுள. காணுதும். |
| 280. | இருநீ யதுகா றிவ்வயி னினிதே! | | | (ஜீவகன் போக) |
| குடில, | | கருதுதற் கென்னே! வருவது கேடே. தப்பினா யிருமுறை, தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம். மடப்பயல் நீயே | | | (பலதேவனை நோக்கி) | | | அதற்கெலாங் காரணம். |
| 285. | இதுபோல் வேலுன் நெஞ்சிடை யிறக்கிடில், |
| | மன்னனைக் குத்திட உன்னினை : ஊழ்வினை யென்னையே குத்திட இசைந்தது : யார்பிழை? |
| குடில, | | பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! |
| 290. | பகைக்கலை யெனநான் பலகாற் பகர்ந்துளேன். |
|
|
|