பக்கம் எண் :

மனோன்மணீயம்
124

பலதே. 

பகையோ? பிரியப் படுகையோ? பாவி!

 


குடில,

பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்
எரிவதென் னுளமுனை யெண்ணுந் தோறும்.
அரியவென் பணமெலா மழித்துமற் றின்று -


பலதே.295.

பணம்பண மென்றேன் பதைக்கிறாய் பிணமே!
நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற்
கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே!

(பலதேவன் போக)


குடில,

விதி யிது! இவனுடன் விளம்பி யென்பயன்?
இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின!

300.புதுவழி கருதுவம்! போயின போகுக! (மௌனம்)
எதுவுமிந் நாரண னிருக்கில்,
அபாயம், ஆ! ஆ! உபாயமிங் கிதுவே. 
(2)

(குடிலன் போக)


நான்காம் அங்கம் : 3-ம் களம்
முற்றிற்று.