பக்கம் எண் :

மனோன்மணீயம்
125

நான்காம் அங்கம்

4-வது களம்

இடம் : அரண்மனையிலொருசார். காலம் : மாலை.

ஜீவகனுங் குடிலனும் மந்திராலோசனை : பலதேவன் ஒருபுறம் நிற்க.

(நேரிசை ஆசிரியப்பா)


ஜீவகன்.

ஆதி யின்னதென் றோதுதற் கரிய
வழுதியின் தொழுகுல வாணா ளோரிரா
எனமதிப் பதற்கு மிகுந்ததே! குடில!
இத்தனை கேடுஇன்று எங்ஙனம் விளைந்தது?

5.

சற்று மறிந்திலேன் தையலர் புகலுமுன்.
மாற்றார் நமது மதிற்புறத் தகழைத்
தூர்த்தா ரெனப்பலர் சொல்லுவ துண்மைகொல்!


குடில,

ஓரிட மன்றே. உணர்ந்திலை போலும்.

(தனதுள்)வேரறக் களைகுதும். இதுவே வேளை.

ஜீவ,10.

என்னை! என்னை!


குடில,

மன்னவா! யானிங்

கென்னென வோதுவன் இன்றையச் சூது?

ஜீவ,

மருவரு மதிலுள கருவி யென் செய்தன?


குடில,

கருவிக ளென்செயுங் கருத்தா இன்றியே!


ஜீவ,காவ லில்லைகொல்? சேவகர் யாவர்?

குடில,15.

ஏவலின் படியா மெண்ணா யிரவர்
ஆதியர் காவலா ஆக்கியே யகன்றோம்.


ஜீவ,

ஏதிது பின்னிவ ரிருந்துமற் றிங்ஙனம்?


குடில,இருந்திடி லிங்ஙனம் பொருந்துமோ இறைவ!

ஜீவ,செவ்விது! செய்ததென்?

குடில,

எவ்விதஞ் செப்புகேன்?

20.

நாரணர் காவலின் நாயக ராக்கினோம்.
போரிடைக் கண்டனை நாரணர் தம்மை.


ஜீவ,மெய்ம்மை! கண்டனம், விட்டதென் காவல்?