பக்கம் எண் :

மனோன்மணீயம்
126

குடில,

ஐய! யா னறிகிலன். அவரிலும் நமக்கு
மெய்ம்மையர் யாவர்? வேலியே தின்னில்

25.

தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர்.


ஜீவ, துரோகம்! துரோகம்!

குடில,

துரோகமற் றன்று!

விரோதம்! அடியேன் மேலுள விரோதம்.
திருவடி தனக்கவர் கருதலர் துரோகம்.

ஜீவ,

கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில், 


குடில,30.

மடையன்! ஐயோ! மடையன்! சுவாமீ
எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில்
நெருப்பினை யிடல்போ லன்றோ நேர்ந்தது.
விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி யாயின்,
திருத்தமா யொருமொழி திருச்செவி சேர்க்கில்

35.அளிப்பையே களிப்புட னமைச்சுந் தலைமையும்!
அத்தனை யன்புநீ வைத்துளை!

(அழுது)


ஜீவ,

ஆ! ஆ!

எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்!

குடில,

ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது?
தெய்வமே யறியுமென் சித்த நிலைமை!

40.வெளிப்பட வொருமொழி விளம்பிடில் யானே
களிப்புட னளிப்பனக் கணமே யனைத்தும்.
விடுவேம் அதற்கா வேண்டிலெம் முயிரும்!
போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி?

(பலதேவன் மார்பைக் காட்டி.)


ஜீவ,யார்? யார்? நாரணன்? 

(பலதேவனை நோக்கி)


பலதே.

ஆம்! அவ னேவலில்

45.

வம்பனங் கொருவன் - 


ஜீவ,

நம்பகை யன்றுபின்!


குடில, நின்பகை யன்றுமற் றென்பகை யிறைவ!

ஜீவ,

உன்பகை யென்பகை! ஓ! ஓ! கொடியன்!
செய்குவ னிப்போ தேசிரச் சேதம்!