பக்கம் எண் :

மனோன்மணீயம்
127

இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்?

குடில, 50.

அடங்கலு மிதனாலைய! அன்றேல்,
இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்?
மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்!
ஒருமொழி யல்லா திருமொழி யாயின்
வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்!


ஜீவ,55.அழைநா ரணனை.

(முதற்சேவகனை நோக்கி)


முதற்சேவ,

அடியேன்.


ஜீவ, 

நொடியில்.

(சேவகன் போக)

பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம். பாவி!
இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்?

குடில,

சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள்.
என்னதே யப்பிழை. மன்ன! நீ காக்குதி!

60.

வருபவை யுன்றிரு வருளால், வருமுன்
தெரிவுறு மறிவெனக் கிருந்தும், திருவுளம்
நிலவிய படியே பலதே வனைப்படைத்
தலைவனா யாக்கிடச் சம்மதித் திருந்தேன்.
எனதே யப்பிழை. இலதே விவ்விதம்

65.

நினையா னிவனுயிர் நீக்கிடப் பாவி!
அதன்பின் னாயினு மையோ! சும்மா
இதமுற விராதுபோர்க் களமெலாந் திரிந்து
கடிபுரிக் காவற் படைகளுந் தானுமாய்
இடம்வல மென்றிலை : இவுளிதே ரென்றிலை :

70.

கடகய மென்றிலை : அடையவுங் கலைத்து,
கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை-(விம்மி)


ஜீவ,கண்டனம் யாமே.

குடில,

காலம்! காலம்!


ஜீவ,கொண்டுவா நொடியில் 
(2-ம் சேவகனை நோக்கி)

2-ம் சேவ, 

அடியேன்! அடியேன் -

(2-ம் சேவகன் போக)