| | உமக்காங் கொடிய கழுமா மெமக்கும் நன்றே யென்றே நின்றோ மன்றிக் கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி. |
| நாரா, | | தென்னவன் சிறைசெயச் செப்பினன் : அதனால் |
| 250. | இன்னம் பிழைப்பே னிக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையே லெனக்கினி யெய்துவ தறியேன். வல்லைநீர்! செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்! |
| 255. | நல்லது! நல்லது! | | | (படைஞர் விடைபெற்றுப் போக) |
| | நுஞ்சொ லென்சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ வென்றெனக் குறுவதோ ரையம். சத்தியம் ஜயிக்கு மென்றீர். எத்திறம்? குடிலன் தனக்கது கூலமா யனைத்தும் |
| 260. | முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! |
| நாரா, | | பொறு! பொறு! முடிவி லறிகுவை. |
| | தருணம் யதோ? மரணமோ என்றால், மரண மன்றது : மறுபிறப் பென்பீர். யாதோ வுண்மை? |
| நாரா,(இருவரும் | | ஓதுவம் : வாவா! |
| நடந்து) | 265. | நன்றிது தீதிது வென்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணிபே. அதனால் தேற்ற மிதேயெனச் செய்கநல் வினையே. |
| | (1) | | | (நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக.) |
| பலதே. | | என்னையுன் பீதி! எழுவெழு. இவர்க்குன் பொன்னோ பொருட்டு? |
| | (பலதேவனுங் குடிலனும் வெளியே வந்து) |
|
|
|