| | தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர் சேய்மை யுனிமனை திரும்பா ரொப்பர். ஆதலால் ஜீவக! தீதென வருதற் கியாதோ ரையமு மிலைநீ தொடரியல் |
| 95. | எனவின் றெய்திய வற்றா லுனது மனத்திடை மயக்கற மதித்துளை யாயின், ஒழுங்கா யிவையெலா மொழித்தயான் குறித்த மருங்கே யணைந்து வாழலே கருமம். வேறிலை தேறு மார்க்கம். |
| 100. | கூறுதி யதனா லுன்மனக் கோளே. | (2) |
| ஜீவ, | | ஐய! யா னுரைப்பதென்? அடுத்தவை இவையெலாம் கைவிடி லென்னுயிர் கழியும். அதனில் இன்றியான் பட்ட விகழ்ச்சி முழுதும் பொன்றிடப் பொருதுபின் பொன்றுத லன்றோ |
| 105. | சிறப்பது செப்புதி! சிறியே னொருசொல் மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே! |
| சுந்தர, | | சங்கரா! சற்றோ தாதான் மியபலம்! வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே! நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய |
| 110. | அற்பமாஞ் சிற்றுயி ரரியதன் னுடலையும் பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல் கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி. இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன். செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் னையம் |
| 115. | வருவது. அதனால், மதிகுலம் வந்த ஒருமலர் நின்னுழை யுள்ளது : தமிழர் ஆவோர் யார்க்கு மஃதுரித் தாம் : நீ காவா யாகிற் காப்பதெங் கடனே. |
| ஜீவ, | | இதுபோ லில்லை யடிகள் செய்யு |
| 120. | முதவி. தமியேற் குளதுய ரிதுவே. கண்மணி தனையெணிப் புண்படு முள்ளம் அருளுதி காக்கு முபாயம், இருணிறை யிடுக்கணுக் கியைந்திடு மருந்தே. | (3) |
|
|
|