பக்கம் எண் :

மனோன்மணீயம்
141

சுந்தர,

நல்லது! கேட்டி! சொல்லுதும். உரியநீர்

125.

விட்டான் முதலையும், விரும்பிய திலகப்
பட்டாற் களிறும் பலமில வாகி
விடுமென வறிந்த கெடுவினை யாளர்
தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி
யிடமது பெயர்ந்துழி, எடுத்தவெவ் வினைக்குங்

130.

கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும்,
அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட்
கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி
தொட்டென் னுறையுள் மட்டுமோர் சுருங்கை
அதிரக சியமா யமைத்துளேன். அவ்வழி,

135.

 சதமென நம்புமிச் சாலி புரமும்,
அதன்புற மூன்றிய அடர்புலப் படையும்,
அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை
மறந்திடா மாபதி யடைந்திடச் செயுமே.


ஜீவ,

தேவரீர் செய்யுந் திருவரு ளுக்குமா

140.

றாவது முளதோ? ஆ! ஆ! அடிகாள்!
வழுதியர் பலர் பலர் வழிவழி காக்கும்
முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும்,
பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது
திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே!


சுந்தர,145.

நல்லது! முகம னவின்றனை. நிற்க.
சொல்லிய சுருங்கை யுனக்குமிவ் விடுக்கணி
லுதவுமோ வன்றோ உரைக்குதி விரைந்தே.


ஜீவ,

அடியே னாசை திருவடி யறியும்.
கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது.

150.

பாண்டியர் குலமெனும் பாற்கட லுதித்த
காண்டகு கன்னியை யிவ்வழி யுன்றிரு
உளப்படி கொடுபோ யளித்தரு ளுதியேல்,
இந்துவின் குலமெனு முந்திய பெயர்போய்ச்
சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும்.

155.

நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த
தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலாம், யானும்